23 February 2012


மரணத்தை வெல்லும் வழி

பொன்னார்ந்த திருவடியைப் போற்றி எங்குப்

புகலுவேன் யான் அறிந்த உண்மை எல்லாம்;

முன்னோர்கள் எவ் உய்ரும் கடவுள் என்றார்,

முடிவாக அவ்வுரையே நான் மேற்கொண்டேன்;

அன்னோர்கள் உரைததன்றி செய்கையில்லை

அத்வைத நிலை கண்டால் மரணம்முண்டோ?

முன்னோர்கள் உரைத்தபல சித்தர் எல்லாம்

முடிந்திட்டார், மடிந்திட்டார், மண்ணாய் விட்டார்.

.................................................

.................................................

பார்மீது நான்சாகா திருப்பேன், காண்பீர் !

மலிவு கண்டீர் இவ்வுண்மை, பொய் கூறேன் யான்,

மடிந்தாலும் பொய் கூறேன் மானிடற்கே,

நலிவுமில்லை, சாவுமில்லை, கேளிர், கேளிர் .

நாணத்தைக் கவலையினை சினத்தைப் பொய்யை

அச்சத்தை வேட்கைதனை அழித்து விட்டால்

அப்போது சாவும் அங்கே அழிந்து போகும்:

மிச்சத்தை பின்சொல்வேன், சினத்தை முன்னே

வென்றிடுவீர், மேதினியில் மரண மில்லை;

- பாரதி

No comments:

Post a Comment